tag:blogger.com,1999:blog-7758053581502649293.post7730104557809499407..comments2023-10-16T03:31:05.071-07:00Comments on கணையாழி: கடைசிப்பக்கம் - சரித்திரமும் சக்கரமும்Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7758053581502649293.post-59667044889828656652012-04-15T00:41:23.431-07:002012-04-15T00:41:23.431-07:00இ பா சுட்டிக்காட்டும் இந்திய--கிரேக்க அரசியல்இணை க...இ பா சுட்டிக்காட்டும் இந்திய--கிரேக்க அரசியல்இணை கவனத்துக்கும் கவலைக்கும் உரியது.<br />ஆனால் ஒன்று. <br />பண்டைய கிரேக்க ஜனநாயகத்தின் எல்லைகள் மிகக் குறுகலானவை. எனவே எளிதில் சீர்குலையும் தன்மை வாய்ந்ததாகவும் சர்வாதிகாரிகளுக்கு இடம் கொடுப்பதாகவும் இருந்தது. பின்னாளில் உருவாகி வளர்ந்த மேலை ஜனநாயகம் வேறு வகைப்பட்டது. அது சரியாக இயக்கப்பட்டால் சர்வாதிகாரிகள் உருவாக மாட்டார்கள். அல்லது உருவானாலும் நீடித்து ஆதிக்கம் செலுத்தமுடியாமல் வீழ்த்தப்படுவார்கள்.<br />இந்த நவீன ஜனநாயகமுறை பண்டை கிரேக்கத்தில் இருந்ததில்லை. பண்டைய இந்தியாவில் இருந்ததாக தேசியப்பார்வை கொண்ட இந்திய வரலாற்று அறிஞர்கள் பீற்றுவதில் பொருள் இல்லை. ராஜராஜனின் குடவோலை முறையை சுட்டிக்காட்டி நம் முதுகில் நாமே தட்டிக்கொள்ளவேண்டாம்.<br /><br />நம் நாட்டின் பிரச்சினை அளவுக்கு அதிகமான ஜனநாயகம் அல்ல. அண்ணல் அம்பேத்கர் எச்சரித்ததுபோல் ஜனநாயகத்தை வளர்த்தெடுப்பதற்கு பதில் கருகவிட்டுவிட்டோம்.<br />இதன் காரணமாக ஏற்கனவே 1970 களிலேயே முதல் சர்வாதிகாரி சுதந்திர இந்தியாவில் தோன்றினார். அவர்தான் இந்திரா காந்தி. மெல்ல வளர்ந்து வந்த ஜனநாயக அமைப்பை அவர்தான் திரிபுக்கு ஆளாக்கினார். விளைவுகள் பூதாகாரமாக வளர்ந்து இன்று இபா கூறுவதுபோல் மூலைக்கு மூலை சிறிதும் பெரிதுமான ஆதிக்கவாதிகள் நாளுக்கு நாள் பெருகி வருகிறார்கள்.<br /> <br />எனவே ஷேக்ஸ்பியர் சொன்னது போல் குற்றம் நட்சத்திரங்களிடம் இல்லை. நம்மிடம்தான் உள்ளது. குற்றம் அதிகமான ஜனநாயகத்திடம் இல்லை, குறைவான வளர்ச்சியால் கருகிப்போன ஜனநாயகத்திடம்தான் உள்ளது.<br /><br />மருதமுத்துMARUDHAMUTHU RADHAKRISNANhttps://www.blogger.com/profile/09789806647305770301noreply@blogger.com