Saturday, December 3, 2011

கவிதை: பாலநாயகர்



கடவுத்துதி
எண்ணிக்கையற்று
பரவிக்கிடக்கிறது ‘..........’
எறிந்த எரிதழலின் பொறிகள்
பரிபூரணங்களாக இல்லாவிட்டாலும்
அதாவதான வேளைகளில்
லௌகீகத்தின் மீட்சிபெற்று
ஆனந்தம் துய்த்திருக்கிறேன்.

கடனென்றில்லாமல்
காணிக்கையின் பால்
நின் பாதம் பற்றுகிறேன்
ஏன் ஏனென்று
எங்கு எப்படியென்று
எதுவுமில்லாத நீ கடவுளெனில்
இங்கு நான் யார்?
சதா காலமும் உன்னை
சபித்தால் நாஸ்திகனா?!
சதாசிவ உதாரணமும்
உன்னைத் துதிக்க அடியவனா?!
துதி கேட்கவா
துவங்கியிருக்கிறாய் உயிர் விளையாட்டை.
கடமையும் கடனும்
எதுவென நிரூ பணிக்க
எல்லாம் மாயையெமெனில்
நீ மட்டுமெப்படி நித்யமாக?!

ஆயினும்,
பரிபூரணங்களாக இல்லாவிட்டாலும்
நின் பாதம் பற்றுகிறேன்.
இங்கு நான் யார்?
எதுவுமில்லாத நீ கடவுளெனில்
கடவுத்துதி கர்மம் எதற்கு?

No comments:

Post a Comment