Friday, May 13, 2011

நான் பேசிப் பழகாத சிட்டி

தீபம். எஸ். திருமலை

தீபம் இலக்கிய மாத இதழ் ஏப்ரல் 1965-இல் ஆரம்பமானது. பத்திரிகையைத் தவிர மாதா மாதம் தீபம் அலுவலக மாடியில் ‘பவர்’ என்ற அமைப்பு மூலம் எழுத்தாளர்கள் பலரும் கலந்துகொள்ளும் இலக்கிய நிகழ்ச்சி களும் நடக்கும். அதில் கலந்து கொள்ளாத எழுத்தாளர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த வகையில் சிட்டியும் எங்கள் அலு வலகத்திற்கு வந்திருக்கிறார். நான் பத் திரிகை எழுத்தாளர்கள் மத்தியிலேயே வாழ்ந்ததால் நான் எந்த எழுத்தாளரைக் கண்டும் வியந்ததில்லை. அவர்கள் எழுத்துக் களைப் படித்திருந்தாலும், எழுத்தைப் பாராட்டிப் பேசும் வழக்கமும் இல்லை.



பவர் கூட்டம் நடக்கும் முன்பு மாடியைச் சுத்தம் செய்து வைப்பதுடன் என் பணி சரி. தீபம் அலுவலகம் முதல்மாடி. பவர் கூட்டம் நடப்பது இரண்டாவது மாடி. நான் தீபத்தில் அமர்ந்துகொண்டு பவர் கூட்டத்துக்கு வருகிறவர்களை மேலே அனுப்பி வைக்க வேண்டும். கூட்டத்தில் கலந்து கொள்பவர் களுக்கு தேநீர் எதுவும் வழங்கப் படுவ தில்லை. கூட்டம் முடிந்த பின்பு நண்பர்கள் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து அருகில் உள்ள தர்பார் ஹோட்டலுக்கு டீ குடிக்கவோ அல்லது உடுப்பி கிருஷ்ணா-வில் காபி குடிக்கவோ சென்று விடுவார்கள். அதன்பின் தான் நான் அலுவலகத்தைப் பூட்டிக் கொண்டு வீடு செல்ல முடியும். தீபத்தில் அச்சகம் இருந்ததால் பவர் கூட்டங்களுக்கு அழைப்பிதழ் கார்டு அடிப்போம். சமயங்களில் தீபத்திலும் அறிவிப்பு வரும்.

இந்த பவர் கூட்டத்திலேயே இலங்கை, மலேசிய எழுத்தாளர்களுக்கு வரவேற்பு உபசாரமும், தி. ஜனாகிராமன் சென்னையி லிருந்து தில்லிக்கு மாறுதல் ஆகிச் சென்ற போது பிரிவுபசார விழா நடத்தியதாகவும் நினைவு. ஆக சிட்டியை தீபம் அலுவலகத்தி லேயே பார்த்துள்ளேன். ஆனால் இவர்தான் சிட்டி என்று என்னிடம் யாரும் அறிமுகம் செய்து வைக்கவில்லை. நான் பேசியதும் இல்லை.
முதன்முதலில் வாசகர்வட்டம் வெளி யிட்ட ‘நடந்தாய் வாழி காவேரி’ நூலைப் படித்து மகிழ்ந்தேன். இருவர் சேர்ந்து ஒரு நூலை எப்படி எழுத முடியும் என்பது அப்போது என் சந்தேகமாயிருந்தது. அடுத்து தீபத்தில் சிட்டி சிவபாதசுந்தரம் இணைந்து ஒரு கட்டுரைத் தொடர் எழுதினார்கள். ஆனால் அதை சிவபாதசுந்தரம் வீடு சென்று தான் பெற்று வருவேன். சிட்டியைப் பார்த்த தில்லை. தீபம் நின்றதால் அந்தத் தொடரும் பாதியில் நின்றது.

நான் 1980-1990களில் தினமணி நூல் மதிப் புரையாளர். ஒருமுறை தினமணி நூல் மதிப் புரைக்கு சிட்டி எழுதிய ‘கண்ணன் என் கவி’ என்ற நூல் என்னிடம் மதிப்புரைக்கு வந்தது. அதற்கு தினமணியில் நான் மதிப்புரை எழுதி னேன். பின்னர் அகில இந்திய வானொலி யிலும் நூல் மதிப்புரை வாய்ப்பு வந்தது. அதிலும் கண்ணன் என் கவி நூலை மதிப்புரைக்கு கொடுத்தார்கள். மற்றும் இரு நூல்கள் அதில் ஒன்று ஓவியர் ஸாரதியின் ஜோக்குகள்.

ரேடியோவில் அதற்கு ஒதுக்கப்பட்ட நேரம் 15 நிமிடங்கள். நான் 10 நிமிடம்.

சிட்டி நூலைப் பற்றியே பேசினேன். மிகுதி 5 நிமிடத்தில் மற்ற இருநூல்களையும் விமர்சித்தேன்.
ஏ.என்.எஸ். மணியன் சிட்டியின் 80, 90 வயது நிறைவையொட்டி அவர் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்று வந்ததாகக் கூறுவார். எனக்கு நேரடித் தொடர்பு இல்லாமையால் அழைப்பு இல்லை. தகவலும் தெரியாது. அதனால் அதில் கலந்து கொள்ளவில்லை. சிட்டி மணியனுக்கு எழுதிய கடிதத்தைப் படித்துள்ளேன்.
குங்குமம் வார இதழிலும் சிட்டியைப் பேட்டி கண்டார்கள். பேட்டிக்குச் சென்ற வரிடம் ஆர்.சி. சம்பத் அவரது நகைக்சுவை நூலான ‘மண்ணாங்கட்டி’யை கொடுத்திருந் தார். அதை அவரிடம் இரவல் வாங்கி படித்து மகிழ்ந்தேன். சிட்டியின் இரு புதல்வர்களையும் இலக்கிய கூட்டங்களில் சந்திப்பதுண்டு. ஒரு முறை அவர் மகன் களில் ஒருவரிடம் இருவர் சேர்ந்து (சிட்டி - ஜானகிராமன், சிட்டி - சிவபாதசுந்தரம்) எப்படி எழுதுவார்கள் என்ற சந்தேகத்தி னைக் கேட்டேன்.

சிட்டி விஷயங்களை தகவல்களைச் சேகரித்து விடுவார். மற்றவர் நடை சிறப் பாக இருக்குமென்பதால் மற்றவர், தி. ஜானகிராமன், சிவபாதசுந்தரம் அதை எழுதத் துவங்குவார் என்று விளக்க மளித்தார். என் சந்தேகம் தீர்ந்தது.

ஆக சிட்டியுடன் எனக்கு நேரடிப் பழக்கம் இல்லாவிட்டாலும் அவர் எழுத்து மூலம் அவரை நன்கு அறிவேன்.

சிட்டி கிமிஸி-ல் பணி புரிந்ததாகக் கேள்வி. நானும் 15 ஆண்டுகள் கிமிஸி ஜிக்ஷி-யில் செய்திப் பிரிவில் தற்காலிகப் பணியாளராகப் பணி யாற்றியுள்ளேன். என்பதையும் நினைத்துக் கொண்டேன்.
சிட்டியின் நூற்றாண்டு விழாவை அவர் மகன்கள், மகள்கள் சிறப்புடன் பாரதி.

இல்லத்தில் நடத்தினர். அதில் கலந்து கொள்ளும் பேறு பெற்றேன். அவர் நினை வாக இருவருக்குப் பரிசு வழங்கப்பட்டது. அன்று சிட்டி பற்றிய குறும்படம் ஒன்று திரையிட்டப்படுவதாக அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது. முதலில் திரைப் படம், பின்னர்தான் நிகழ்ச்சி ஆரம்பம். ஆனால் ஒலி மாத்திரம் வந்தது. அது மாத்திரம் அன்றைய விழாவில் பெரும் ஏமாற்றமே. குறும்படத்தைப் பார்த்திருந் தால் சிட்டியையே அன்று நேரில் கண்டு பேசிய உணர்வு ஏற்பட்டிருக்கும்.

இந்த தகவலை எனது நண்பர் எஸ். சுவாமிநாதனிடம் ஒருநாள் பேச்சுவாக்கில் கூறினேன். சிட்டியை பற்றி குறும்படம் நான் எடுத்து வைத்துள்ளேன் என்று கூறியதும் எனக்கும் ஒரே மகிழ்ச்சி. அன்று விழாவில் பார்க்காத படத்தை இவர் இல்லத்தில் பார்க்கலாமே என்று. ஒரு ஞாயிறு அதற்கென்றே நேரம் ஒதுக்கி சுவாமிநாதன் இல்லம் சென்றேன். முதலில் பார்த்தது அவர் மறைந்தபோது மின்தகன மேடையில் எடுக்கப்பட்டிருந்தது. பல எழுத்தாளர்கள் அதில் கலந்து கொண்டிருந்ததைப் பார்க்க மகிழ்வை ஏற்படுத்தியது. அவர் மறைவு அன்று அவர் இல்லம் சென்று அதில் கலந்து கொள்ளாத குறையை அந்தக் குறும்படம் நீக்கிவிட்டது என்றுதான் சொல்வேன்.

அது தவிரவும் அவர் உயிருடன் இருந்த போது அவரது பிறந்தநாளின்போது அவரைச் சந்தித்துப் பேசிய நேர்காணல் பார்க்க முடிந்தது. அதில் அவர் சற்று இளமையாக இருந்தார். ஆனால் வார்த்தை களில் சற்று தெளிவில்லை. வயோதிகம்தான் காரணம்.

அவர் மகன் விஸ்வேஸ்வரனின் அறிமு கம் கிடைத்தது. அவரிடம் நானும் என் எழுத்தும் கட்டுரை கேட்டு வாங்கினேன். அதில் அவர் தன் தந்தைக்கு உதவியாளராக காலம் முழுவதும் இருந்தமை என் நெஞ் சைத் தொட்டது. இப்போதும் அவர் அப்பா பெயரைச் சொன்னால் சிலிர்த்துப் போய் விடுகிறார்.
வீரராகவன் (திருச்சி) அந்த நாள் முதலே சிட்டியின் குடும்ப நண்பர். அவர் சிட்டியின் மீதுள்ள அபிமானத்தால் சிட்டி யுடன் பழகியவர்களை சந்தித்து சிட்டியைப் பற்றி கட்டுரை வாங்கி ஒரு கையெழுத்து மலர் வெளியிடும் முயற்சியில் இருந்ததால் என்னைத் தேடி வந்து கட்டுரை கேட்டார். அவருக்கு வயது 80-க்கு மேல். நடக்கவே சிரமப்படும் நிலை. பார்வை மங்கல், இந்நிலையில் அவர் சிட்டிக்காக மலர் தயாரிப்பதில் இறங்கியது அவர்மீது எனக்கு கோபத்தையே உண்டாக்கிவிட்டது. அதை சொல்லவும் சொல்லிவிட்டேன். அவர் மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் ஏன் இப்படி சிரமப்படுகிறீர்கள் என்று கேட்டு விட்டேன்.

ஆனால் அதற்கு அவர் மலர் வெளியிடு வது என்று தீர்மானித்து விட்டேன். அதை வெளியிட்டே தீர்வேன் என்று உறுதியாக இருந்தார். அந்த வயதிலும் அந்த உறுதி யைக் கண்டு மலைத்துப்போனேன். என்

கட்டுரையை கொடுத்தேன். என் நண்பர் ஏ.என்.எஸ். மணியன் கட்டுரையும் கிடைக்கச் செய்தேன். நூற்றாண்டு விழாவில் அவர் ஊரில் இல்லை போலும். வர வில்லை. விழா வில் அவரைத்தான் முதலில் தேடினேன்.

சொன்னபடியே கையெழுத்து மலர் தயாரித்து வீட்டிலேயே வெளியீட்டு விழா வும் ஏற்பாடு செய்துவிட்டார். ஒரு ஞாயிறு மாலை 3 மணி அளவில் விசாலாட்சி தோட்டம் அவர் இல்லத்தில் குறுகிய இடத்தில் (ஆனால் அவருக்கோ பரந்த மனசு) சிட்டி குடும்பத்தினர். பேரன் பேத்திகள் மூன்று தலைமுறையினர். திரு நரசய்யா கலந்து கொள்ள நானும் நான் அழைத்து சாருகேசியின் சகோதரர் லெம னும் கலந்து கொண்டோம். அனைவருக்கும் சிற்றுண்டி, இனிப்பு, காரம், காபி என்று முழுவிருந்து அளித்து விட்டார். சிட்டியைப் பற்றி ஒவ்வொருவரும் ஆத்மார்த்தமாக பேசினார்கள். பேரன், நானும் தாத்தாவும் என்று பேசியது மனதை தொட்டது. அவரிடம் தலைமுறை இடைவெளியே இல்லாதது கண்டு வியந்தேன். அந்த வயதிலும் கணினி இயக்கக் கற்றுக் கொண்டாராம். அந்த மலர் விஷயங்கள் இணையத்தில் வெளியிட்டிருப்பதாகக் கேள்வி.

எனக்கு என்னவோ, அந்த கட்டுரை களையும் மேலும் பலர் கட்டுரைகளையும் முக்கியமாக அவர் குடும்பத்தினர் கட்டுரை களையும் சேர்த்து ஒரு அச்சிட்ட மலராக வெளியிட வேண்டும் என்று ஆசை. அது எப்போது நடக்குமோ?

இன்னமும் என் பல நண்பர்கள் சிட்டி யின் எல்லா நூல்களையும் படிக்க வேண்டும். உங்களிடம் இருக்குமா என்று கேட்கிறார்கள். என்னிடம் ஒரு சில நூல்கள் தான் உள்ளன.

சிட்டி மறக்க முடியாத மனிதர், பின்னர்தான் எழுத்தாளர் என்று சொல்வேன்.

No comments:

Post a Comment