Saturday, April 16, 2011

கைதவம்

சூரியக் கொழுந்தொன்று
விண் தாண்டி மண்ணேயேறித்
தழலாகி, நீராகி,
மண்ணாகி, மரமாகி
புழுவாகிப், பாம்பாகி
பல்மிருகமாகி, மனிதனாய்
பா செய்து பாவனையிலிருந்தும்
சூரியக் கொழுந்து
அங்கேயே இருந்தது
இன்னருள் செய்து கொண்டு!
-நா.கண்ணன்

No comments:

Post a Comment