Monday, April 18, 2011

நட்பு

முன்னொருநாள் உன் நாமம் கேட்டேன்
பின்னைப் பின்னொருநாளில் என்
அன்னை இட்டுச் செல்ல உன் இல் புகுந்தேன்
சின்னக் கொவ்வாயும் குமிழ் சிரிப்பும்
என்னைக் கொள்ளை கொள்ள
பிந்நைப் பிற பெண்ணே போல்
மண்ணிலும் நீரிலும் களிநடை பயின்றோம்.
பின் என்னைப் பெண் பார்த்தர்
ஆணுக்கு உடமையென்று வதுவை பிற செய்தார்
பெண்ணென்று, ஆணென்று அளுக்கொன்று பெற்றுத்தந்து
மண்ணிலே உலா வந்து ஆடிக்களைத்தபோது
உன் பாலமுகம் மீண்டும் வந்தது
என்ன வினை? உன்னை அப்போதே பிடித்திருக்க வேண்டும்!
எண்ணித் தவமியற்ற இயலாத போழ்து தன்னில்
மன்னி மருகுகின்றேன் உன்னை நான் அறியேனென்று.
- நா.கண்ணன்

No comments:

Post a Comment