Monday, October 3, 2011

ஆசிரியர் பக்கம்

உங்களுடன்
பாவமும் பாவிகளும்


அக்டோபர் 2
காந்தி பிறந்த நாள்
கவிஞர் இரவீந்திரநாத் தாகூர்
மகாத்மா என்றார்.
தென்னாப்பிரிக்க யூனியன் பிரதமமந்திரி (1939) ஜெனரல் ஸ்மட்ஸ் சொன்னார்
‘நீங்கள் ஒரு பாரிஸ்டரை அனுப்பிவைத்தீர்கள் நாங்கள் அவரை
மகாத்மாவாகத் திருப்பி அனுப்பினோம்’ காந்தி சொன்னார்
“நான் பிறந்து வளர்ந்தது இந்தியாவில்
உருவாக்கப்பட்டது தென்னாப்பிரிக்காவில்.”

பாபு என்றும் அழைக்கப்பட்டார்
குஜராத்தியில் தந்தை என்று பொருள் தேசத்தந்தை என்று
பொருள் விரித்தவர் காந்தி
அக்டோபர் 2
வன்முறைக்கு எதிரான நாள் என்று ஐ.நா. 15.3.2007 இல் அறிவித்தது
பாபு உலகத்தந்தையானது.
சகமனித உணர்வுக்கு இடமின்றி
பயணச்சீட்டு இருந்தும் உட்காரவிடாமல்
ஓடும் ரயிலிலிருந்து தள்ளப்பட்ட
ஆட்சியாளர்களின் அநீதிகளுக்கு
ஆதரவாகச் செயற்பட வற்புறுத்தப்பட்ட அதிகாரத்தைப் பலமுறை
அவமானத்திற்கு ஆளாக்கியவர்.
அகமும் புறமும் தூய்மை
உடைமை பொது
மனதில் உறுதி
நம்மை நாமே ஆளக்கற்றல்
இம்மையில் மறுமை காμதல்
புலனடக்கம்
உண்மையாக இருத்தல்
அச்சம் தவிர்த்தல்
பகைமை விரட்டல்
அறங்காவலராகச் செயற்படுதல்
பொதுநலத்தில் அக்கறை
சாதனை காμம் வழிகளிலும்
சத்தியம் கடைப்பிடித்தல்
சொல்லிலும் செயலிலும்
ஒன்றியிருத்தல்
காந்தியை இப்படியெல்லாம்
காட்சிப்படுத்தலாம்
காந்தியின் பெயரால்
விருதுகள் வழங்கப்படலாம்.
இவையெல்லாம்
காந்திக்கு விருதாக வேண்டாமா?

1934 முதல் 1948 வரை
ஐந்து முறை
நோபல்பரிசுக்குக் காந்தி
பரிந்துரைக்கப்பட்டார்
இரண்டுமுறை
இறுதிப் பட்டியல்வரை
இடம் பெற்றார்.
பரிசு கிடைக்காததால்
காந்தி வருத்தப்படவில்லை
வழங்காமல் விட்டுவிட்டோமென்று
நோபல்பரிசுக் குழு வருத்தப்பட்டிருக்கிறது. காந்தி பிறந்ததேசம்
விருது வேட்டையில்
தன்மானத்தை அடகுவைக்கத் துடிக்கிறது.
மதக்கலவரத்தில் மனம் நொந்த
காந்தி நாட்டில்
சாதிக் கலவரங்கள்
மகாத்மாவை அடையாளம் கண்ட நாட்டில் ஆன்மாக்களின் விற்பனை
இந்தியாவின் நாணயத்திற்கு
மதிப்பு சேர்த்தவர் படம்
இலஞ்சத்திலும் ஊழலிலும்...
எல்லாவற்றிலும் வெளிப்படையாக இருந்தவர் கறுப்புப் பணத்திலும்
கள்ளப் பணத்திலும்
நாடு கடத்தப்படுகிறார்
தீயதைப்
பார்க்காதே
கேட்காதே
பேசாதே என்று
குரங்குப் பொம்மைகளாய்
மௌனம் காக்கும் மக்கள்
இருந்தாலும்
இன்னமும் நம்பிக்கை இருக்கிறது
ஏனெனில்
இது காந்தி பிறந்த தேசம்

ம. ரா.

No comments:

Post a Comment