Sunday, July 24, 2011

களங்கமற்ற வர்கள் கல்லெறியட்டும்!

வேத சங்கக் காலத்திலேயே
ஜன நாயகத்தின்
வேர் இருக்கிறது.
இன்றைய உலகில் மிகப்பெரிய
ஜனநாயக நாடு
முதல் தேர்தலில் (1952) 173 மில்லியன்
2009 தேர்தலில் 714 மில்லியன்
வாக்காளர்கள் கணக்கில்
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க நாடு
கூட்டணி சேர்ந்தாலும் கிட்டே வர இயலாது.
இந்தியாவோடு சுதந்திரம் பெற்ற
ஏனைய நாடுகளோடு ஒப்பிட்டாலும்
நெஞ்சு நிமிர்த்தி நடக்க
நியாயங்கள் உள்ளன.
அரசியல் அதிகாரமும்
அறிவியல் கலை இலக்கியச் சாதனைகளும்
அடித்தட்டு மக்களுக்கும்
கைமாறிக் கொண்டிருக்கின்றன.
உலகமே ஆடிப் போன
பொருளாதாரச் சரிவிலும்
நிலைகுலையாத இந்தியா.
குடியரசுத் தலைவர்
சில மாநில முதல்வர்கள் என்று
அதிகாரப் பகிர்வு
பெண்களுக்கும் சாத்தியமாக்கியிருக்கிறது.
ஏழை எளிய மக்கள்
கல்வி பெறவும்
அரசு நிர்வாகத்தில் பங்கேற்கவும்
இந்திய ஜனநாயகம் இடம் தந்திருக்கிறது
ஆனாலும்
ஊடகம் காட்டும் ஜனநாயகம்
ஊழல் பாழ்கிணற்றில்...
ஏழ்மை என்றால் இந்தியா என்று
உலகம் கருதியது ஒரு காலம்.
இன்று
வல்லரசுகள் திரும்பிப் பார்க்க
வளர்கிறது இந்தியா
இந்தப் பிம்பத்தைச் சிதைக்க
யாருக்கோ நாம் அடியாள் ஆகிறோமோ?
இந்தியப் பிரதமர் யார் வரவேண்டும்?
திட்டக்குழுத் தலைவர் யார் வரவேண்டும்?
இந்திய மக்களே தீர்மானித்த காலம் இருந்தது.
ஜனநாயகம் என்றால் தேர்தல் இருக்கும்.
தேர்தல் என்றால் கட்சிகள் வரும்.
ஆட்சியைப் பிடிக்க கட்சிகள் நடத்த
தொழிலதிபர்களின் கருணை வேண்டும்.
கருணை காட்டியவர்கள் அதிகாரச் செயற்பாட்டைக்
கட்டுக்குள் வைக்கும் கருத்தில் இருப்பார்கள்
நேரு சொல்கிறார்:

Elections bring out the evil side of a man
and they donot always lead to the
success of the better man....
We Compromise with some thing
that is wrong, then we have lost
the fight already and
it matters little to who tops the poll.”

இன்றைய ஜனநாயகம்
கட்சிகளின் ஜனநாயகம்
தேர்தலில்
கட்சிகளே வெற்றிபெறுகின்றன
கட்சிகளைக்
கட்டுப்படுத்தவும், ஆராதிக்கவும்
ஊடகங்கள்
ஊடகச் சிறையில்
நமது கண்களும் காதுகளும்
அதனால் தான்
ஊழல் பாழ்கிணற்றில்
இந்திய ஜனநாயகம் என்று
ஊடகம் காட்டுகிறது
உலகம் சிரிக்கிறது
நாமும் கல் எறிகிறோம்.
இந்தியாவில் ஊழலே இல்லையா?
என்பதல்ல நம் கேள்வி.
ஊழலைத் தவிர வேறொன்றுமே
இந்தியாவில்
உருப்படியாக இல்லையா?
இந்திய ஜனநாயகம்
மக்களின் ஜனநாயகமாக
மாறும் போது தான்
இமையம் உலகிற்குத் தெரியும்
ஏசுநாதர் சொல்கிறார்

“If any one of you is
without sin, let him
be the first to throw a
stone at her.”

ஆம்!
களங்கமற்றவர்கள்
கல்லெறியட்டும்!

-ம.ரா

No comments:

Post a Comment